Saturday, October 24, 2015


மகிந்த இரகசியமாக அரச வளங்களைப் பயன்படுத்தி நடத்தி வந்த C S N செய்திச் சேவை ;அம்பலம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் இந்த செய்திச் சேவை  ஜனாதிபதி சர்வதேச ஊடகப் பிரிவு என்ற பெயரில் இயங்கி வந்துள்ளது

கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தினுள் C S N   தொலைக்காட்சி நிறுவனத்தின் அலுவலகம் ஒன்றும் இயங்கி வந்துள்ளமை இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஷ, யோஷித்த ராஜபக்ஷ, மற்றும் சில யுவதிகள் மட்டுமே இங்கு வந்துபோயுள்ளனர்.

எனினும் ஜனாதிபதி ஊடகப் பிரிவுடன் எந்த வகையிலும் தொடர்புபடாத நிலையில் இயங்கி வந்த இந்த அலுவலகத்தின் மூலம் நடைபெற்ற பணிகள் குறித்து யாரும் அறிந்திருக்கவும்  இல்லை.

இந்நிலையில் இன்று குறித்த அலுவலகத்தின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு சோதனையிடப்பட்ட போது, அந்த அலுவலகம் யோஷித்த ராஜபக்ஷவுக்குச் சொந்தமான C S N   தொலைக்காட்சிக்குரிய அலுவலகமாக செயற்பட்டு வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகையில் இருந்த ராஜபக்ஷவினர் தொடர்பான அனைத்து கோவைகளும் அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், இந்த அலுவலகம் மாத்திரம் ராஜபக்ஷவினருக்கு மறந்து போயுள்ளதாக அனுமானிக்க முடிகின்றது.

ஏனெனில் இங்கு C S N  தொலைக்காட்சியின் கோப்புகளும், ஒளிபரப்பு தட்டிகளும் நூற்றுக் கணக்கில் குவிந்து கிடக்கின்றன.

C S N  நிறுவனம் அரச வளங்களை பயன்படுத்தி நடாத்தப்பட்டு வந்துள்ளமை இதன் மூலம் மீண்டும் ஒரு தடவை நிரூபணமாகியுள்ளது.

 

No comments:

Post a Comment